நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் தற்போது தனது மகனின் ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த அழகிய புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து மகனுக்காக உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும், அக்கா கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் ராதிகா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் ஆகும்.
தற்போது கைவசம் சந்திரமுகி பாகம் இரண்டில் பிஸியாக நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். இது மட்டுமில்லாமல் சின்ன திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். சன் தொலைக்காட்சியில் சித்தி, வாணி ராணி, அண்ணாமலை, செல்வி, அரசி போன்ற பல சீரியல்களை தயாரித்து நடித்த அவர் தற்போது சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு சென்று இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்கிற சீரியலை தற்போது அவர் தனது ரேடான் மீடியா நெட்வொர்க்ஸ் மூலமாக தயாரித்து வருகிறார். இந்த சீரியலில் நடிகர் விஜயின் தந்தை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, வெங்கட் ரங்கநாதன், நடிகை ரேஷ்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இதற்கிடையில் குடும்பத்துடன் அடிக்கடி நேரம் செலவிட்டும் வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார் தனது குடும்பம் குறித்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக அவரின் மகள் ரயான் மற்றும் பேரன்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது பேரன் பேத்திகளுடன் அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரது இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்த ரயானுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரயானுக்கும் கிரிக்கெட் வீரர் மிதுன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் பெயர் தாருக். இரண்டாவது மகள் ராத்யா. அவருக்கு தற்போது ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை ரயான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்தப் பிறந்தநாள் பாட்டியில் ராதிகாவால் சில காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சரத்குமாரும் அவரது மகன் ராகுலும் கலந்து கொண்டு பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் ரயான் மகன் தாருக்கின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.