Categories: சினிமா

பாட்டி வா உனக்கு முத்தம் தரேன்.! ராதிகாவை கொஞ்சி விளையாடும் பேத்தி.! அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

நடிகை ராதிகா தற்போது தனது தாயார் கீதா மற்றும் மகள் ரயான் ஆகியோருடன் மகளிர் தினத்தை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் அதன் பின்னர் 200க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.! 

பாட்டி வா உனக்கு முத்தம் தரேன்.! ராதிகாவை கொஞ்சி விளையாடும் பேத்தி.! அழகிய புகைப்படங்கள்.! 1

பல படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் குணச்சித்திர மற்றும் துணை வேடங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ஹீரோக்களின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும், தங்க மகன் படத்தில் தனுசுக்கு அம்மாவாகவும் நடித்ததன் மூலமாக மீண்டும் திரையுலகருக்கு திரும்பி இருந்தார் ராதிகா சரத்குமார். கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லவ் டுடே படத்திலும் ஹீரோவுக்கு அம்மாவாகவும் பட்டத்து அரசன் படத்திலும் ஹீரோவிற்கு அம்மாவாகவும், ரன் பேபி ரன் படத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் ராதிகா.

தற்போது கைவசம் மூன்று படங்களில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் கொலை, சந்திரமுகி பாகம் இரண்டு, கோஸ்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு முதலில் மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனனுடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. பின்னர் அவர் இரண்டாவதாக ஆங்கிலேயர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ரயான். பின்னர் அவரோடும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ராதிகா தனது ராடான் நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது அதன் தொகுப்பாளராக இருந்த சரத்குமார் உடன் காதல் ஏற்பட, இருவரும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார்.

மேலும் சரத்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி வரலட்சுமி மற்றும் பூஜா என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தற்போது ஒன்றாகவே வசித்து வருகின்றனர். இதில் ராயனுக்கு மிதுன் என்பவர் உடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது ராதிகா பாட்டி ஆகிவிட்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது தனது பேரன், பேத்திகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்று தனது தாயார் கீதா மகள் ரயான் பேரன், பேத்தி ஆகியோருடன் அவர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்ழ நேற்று மகளிர் தினம் என்பதால் இந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர் என் தாயார் என் வலிமையை நம்பி உயிர் வாழ வேண்டும் என்று உறுதியான விருப்பத்தை வளர்த்தார்.

எதிர்காலத்தில் ராயன் மீதும் மற்றும் ராத்யா காதல் அனுதாபம் மற்றும் வாழ்க்கையை வாழும் முறையையும் அதன் பயணத்தை கற்றுக் கொள்வதையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் பெண்களுக்கு தின வாழ்க்கையும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ராதிகா தனது தாயார் மற்றும் மகள், பேரன், பேத்தி என்று குடும்பமாக இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்