மஞ்சள் நிற பட்டுப் புடைவயில் தேவதை போல வந்து ஆடிய மஹாலக்ஷ்மி.! தங்க சிலை போல மின்னும் மஹா.!

வெளியிட்டது

சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. இவர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்ன திரையில் நடித்து வருகிறார். இவருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இவர்களின் திருமணத்தை திருப்பதியில் வைத்து நடத்தினர். திருமணம் முடிந்து புகைப்படங்களை மட்டுமே அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

மஞ்சள் நிற பட்டுப் புடைவயில் தேவதை போல வந்து ஆடிய மஹாலக்ஷ்மி.! தங்க சிலை போல மின்னும் மஹா.! 1

இவர்களின் திருமணம் பேசு பொருளானது. youtube, தொலைக்காட்சிகள் என எதை திறந்தாலும் இவர்களின் பேட்டிகள் மட்டுமே காணப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு இவர்கள் ஹனிமூன் க்கு செல்வார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், இவர்கள் சேனல் சேனலாக சென்று பேட்டி அளித்து வந்தனர். முன்னணி நடிகர்களின் திருமணம் கூட இவ்வளவு வைரலாகி இருக்காது. அந்த அளவிற்கு வைரல் தம்பதிகளாக இருவரும் வலம் வந்தனர். தற்போது பேட்டிகள் எல்லாம் கொடுத்து முடித்து இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக உள்ளனர். ரவீந்தர் பாலாஜி முருகதாஸை வைத்து ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

மகாலட்சுமி சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவி மட்டுமல்லாது கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் மகாலட்சுமி. சமூக வலைத்தள பக்கத்தில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் பட்டுப் புடவை அணிந்து அவர் ரீல்ஸ் ஒன்றை போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்