தனது கணவர் வினுவுடன் ரித்திகா புத்தாண்டை கொண்டாடி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும் சமயம் அவர் கணவருடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் இதற்கு முன்பாக ராஜா ராணி என்கிற சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். ஆனால் சில காரணங்களால் அவரால் அந்த நாடகத்தில் தொடர முடியவில்லை. திடீரென நாடகத்திலிருந்து விலகி இருந்தார். பின்னர் அவருக்கு பெரிய அளவில் எந்த நாடகம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர் அவர் பல லட்சம் மக்களால் பார்த்து ரசிக்கப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தார். ஆரம்பத்தில் இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே, அந்த நிகழ்ச்சியின் முக்கியமான நபராகவே மாறிப் போய்விட்டார். அதன் பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் இவர், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலின் கதாநாயகி பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா. இந்த நிலையில் அதே டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வரும் வினு என்பவர் உடன் அவருக்கு காதல் மலர்ந்தது.
கேரளாவில் ஒரு கோவிலில் வினுவுடன் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் அவர் கேரளாவில் வசித்து வருகிறார். மேலும் ஷூட்டிங் க்காக அவர் சென்னைக்கு வந்து செல்கிறார். இந்த நிலையில் நேற்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக கேரளா சென்றுள்ளார். நள்ளிரவு எல்லாரும் ஆட்டம் பாட்டம் என்று இருக்கும் நிலையில் ரித்திகா கணவருடன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.