திருமண வரவேற்புக்கு பின்னர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை ரித்திகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா. இவருக்கு சமீபத்தில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் கேரளாவைச் சேர்ந்த வினு என்பவர் உடன் திருமணம் முடிந்தது.

கேரளாவில் மிக எளிமையாக கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் வைத்து இவர்களுக்கு வரவேற்பு நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

ரித்திகா தற்போது விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலமாக அவர் பல லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பே அவர் ராஜா ராணி என்கிற தொடரில் ஹீரோவுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பல லட்சம் மக்கள் பார்த்து ரசிக்கக்கூடிய குக் வித் கோமாளி சீசன் 2 வில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் ரித்திகா. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பாலாவுடன் சேர்ந்து மொக்கை காமெடிகளை போட்டு வந்தார். அதன் பின்னர் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. இந்த நிலையில் அவர் வினுவுடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமண வரவேற்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அவர்கள் இருவரும் செய்து கொண்ட போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.