திடீரென முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்.?

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இணையத்தில் இன்று ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிய போகிறதா என்கிற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இது இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், அவர்களுக்கு மனைவிகளாக வரும் மருமகள்களின் ஒற்றுமை குறித்தும் இந்த நாடகம் எடுக்கப்பட்டு வந்தது. குடும்பப் பாங்கான கதை என்பதால் இந்த நாடகத்திற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இருந்து வந்தனர். தற்போது கதைப்படி மூத்த மருமகளாக இருக்கும் தனத்திற்கு மார்பக புற்றுநோய் வருகிறது. அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று தற்போது நலமாகி வந்திருக்கிறார்.

திடீரென முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்.? 1

மேலும் அவர் கர்ப்பமாக இருந்ததால் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்து விட்டு தற்போது அவருக்கு புற்றுநோய் சிகிச்சையும் நடைபெற்று இருக்கிறது. இது வீட்டில் இருக்கும் ஆண்களான மூர்த்தி, ஜீவா, கதிர் என யாருக்கும் தெரியாது. தற்போது இந்த விஷயத்தை கதிர் தெரிந்து கொண்டு அதிர்ச்சிகுள்ளாகி இருக்கிறார். அவர் இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்வாரா? மூர்த்திக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த நாடகத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கட்டி வரும் வீட்டிலிருந்து இந்த தொடரில் நடித்து வரும் அனைவரும் எடுத்துக்கொண்டது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதை இல்லாமல் சில சமயங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு கதை நகர்ந்து வந்தது. தற்போது அனைவருக்கும் குழந்தை பிறந்து விட்டது. தனத்திற்கும் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. புதிதாக வீடும் கட்டியாகிவிட்டது. எனவே இந்த நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இணையத்தில் கசிந்த இந்த புகைப்படத்தால் ரசிகர்களும் அது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சீரியல்கள் குறித்து நம்பத் தகுந்த பதிவுகளை வெளியிட்டு வரும் சில இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்