“பலே ஆள்யா நீ”!!தென்னிந்தியாவில் இருந்து 3 முன்னணி நாயகிகளுடன் டூயட் பாடவுள்ள சல்மான் கான்!! அதுவும் ஒரு தல படம் ரீ-மேக்குல!!

வெளியிட்டது

"பலே ஆள்யா நீ"!!தென்னிந்தியாவில் இருந்து 3 முன்னணி நாயகிகளுடன் டூயட் பாடவுள்ள சல்மான் கான்!! அதுவும் ஒரு தல படம் ரீ-மேக்குல!! 1

இந்தி சினிமாவின் பைஜான் என  அழைக்கப்படுபவர் நடிகர் சல்மான் கான். இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரின் படங்கள் அடுத்தடுத்து 300 கோடி 400 கோடி வசூலை எளிதாக கடந்து விடுகிறது. குறிப்பாக சாதாரணமான கண்டேண்டிடன் இவரின் படங்களில் வெளியானாலும் ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “அந்திம்” படம் விமர்சனங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் “Tiger 3” என்ற படத்தில் நடிகை கத்ரீனா கைப்புடன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இவருடைய நடிப்பில் “காபி ஈத் காபி தீவாளி” என்ற படம் தயாராகி வருகிறது. எப்போதும் தன்னுடைய படங்களை ஈத் விடுமுறை தினங்களில் வெளியிட விரும்பும் இவர் இந்த படத்திற்கு அதன் சம்மந்தமாகவே பெயரும் வைத்துள்ளார்.

தமிழில் வெளியாகி ஹிட் அடித்த போக்கிரி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை வெற்றிகரமாக ஹிநிதியில் ரீ-மேக் செய்துள்ள இவர் இப்பொது அடித்து வரும் இந்த படமும் ஒரே ரீ-மேக்கே. நடிகர் அஜித். தமன்னா, விதார்த், சந்தானம், நாசர் நடிப்பில் வெளியான சிவாவின் “வீரம்” படத்தின் ரீ-மேக்காக இந்த படம் உருவாகவுள்ளது. படத்தில் நாயகியாக பூஜா ஹேக்டே நடித்து வருகிறார்.

இப்பொது இந்த படத்தில் மேலும் இரண்டு தென்னிந்திய அழகிகளை நடிக்க உள்ளனர். படத்தில் பூஜாவுடன் நடிகை சமந்தா மற்றும் உண்மை பதிப்பில் நடித்து இருந்த தமன்னா இருவரும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் சில படங்களில் ஏற்கனவே தமன்னா நடித்துள்ளார். சமந்தா இந்த படம் ஒப்புக்கொண்டால் இது அவரின் முதல் படமாகும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்