அறிமுகமான நாக சைதன்யாவுடனே காதல் ஏற்பட பெற்றோர்கள் மத்தியில், மிக பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. 2017ஆம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தின் மூலம், தெலுங்கு தேசத்தின் உச்ச நாயகியாக மாறிப்போனார். 4 ஆண்டுகள் திருமண வாழ்விற்கு பிறகு திடீரென இருவரும் பிரச்சனையை பற்றி கூறாமல், விவாகரத்து பெற்றனர். இது மிக பெரிய அதிர்ச்சியை சமந்தா ரசிகர்களுக்கு கொடுத்தது.

விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இந்திய முழுவத்திலும் பிரபலமானார். தற்போது தமிழில் விஜய்யின் 67வது படத்தில் நடிக்க அவருடன் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தெலுங்கில் ‘சகுந்தலை, யசோதா,’ என இரண்டு படங்கள் அவரது நடிப்பில் இந்த வருடத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

அண்மையில் நடைபெற்ற காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கெடுத்த இவர் அதில் நடிகர் அக்ஷய்குமாரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதையும் அறிவித்துள்ளார். விவாகரத்திற்கு பின் தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் நடிக்க முனைப்புக்காட்டிவரும் சமந்தா இப்பொது அங்கு அறிமுகமாகவுள்ள முதல் படத்திலேயே நடிகர் அக்ஷய் குமாருடன் நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த செய்தி இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஏனெனில் நடிகர் நாகசைதன்யா நடிகர் அமீர் கானின் “லால் சிங் சாத்தா” படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் அதே நேரத்தில் சமந்தாவும் அவரை பின் தொடர்நது இப்போது அங்கு அறிமுகமாகவுள்ளது டோலிவுட் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் நாகசைத்னயாவை வெறுப்பேற்றவே சமந்தா இவ்வாறு செய்து வருவதாக செய்திகள் பலரும் பேசி வருகிறார்கள்.
Video courtesy – Disney+Hotstar