ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏ.ஆர். ரஹ்மான் ஹிட்ஸ் நடைபெற உள்ளது. அதற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சிங்கர் சஞ்சனா ஸ்வர்ணலதா பாடிய “எவனோ ஒருவன் வாசிக்கிறான்” என்ற பாடலை மனமுருகி பாடுகிறார். அதை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவரும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியை போலவே தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சரிகமப என்கிற நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. சீனியரில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்த அந்த நிகழ்ச்சி தற்போது ஜூனியரிலும் மூன்றாவது சீசனை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகிறது. மொழி தெரியாத குழந்தைகள் தொடங்கி, இலங்கை குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தையான பிரியன் உள்ளிட்டோரும் இந்த சீசனில் பங்கெடுத்து வருகின்றனர்.

மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியைக் காட்டிலும் திறமையான போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சுற்றில் குழந்தைகள் சிறப்பாக பாடி வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Zee Tamil