8 வருடங்களுக்கு பிறந்த மகன்.! முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள்

வெளியிட்டது

திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறந்த மகனுக்கு முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாக செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதிகள் இருவரும் இணைந்து கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

8 வருடங்களுக்கு பிறந்த மகன்.! முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள் 1
‘ரேடியோ மிர்ச்சி’ மூலமாக தனது திறமையான பேச்சால் மக்களுக்கு பிடித்தமான நபராக இருந்தவர் தான் செந்தில். இவருக்கு முதல் முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மதுர’ என்கிற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமத்து இளைஞராக நடித்து மக்கள் மனங்களை வென்று இருந்தார் செந்தில்.

பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்கிற சீரியலின் மூலமாக செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடிகள் மக்களுக்கு மிகவும் பிடித்த போன ஜோடிகளாக மாறி இருந்தனர்.

செந்தில் ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் முதல் மனைவி விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் சில வெப் சீரிஸ்கள் மற்றும் சீரியல்களின் நடித்து வருகின்றனர்.

கடைசியாக செந்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற சீரியலில் நடித்திருந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘அண்ணா’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வருடம் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக மிர்ச்சி செந்தில் அறிவித்திருந்தார். குழந்தைக்கு “ஸ்ரீ வல்லப தேவ்” என்ற பெயரிட்டு இருப்பதாகவும், குழந்தைக்கு முதன்முறையாக சோறு ஊட்டும் அன்னப் பிரசன்னம் நிகழ்ச்சியும் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

சில நாட்களாக எந்த புகைப்படமும் வழியாகாமல் இருந்து வந்த நிலையில் தனது குழந்தைக்கு முதல் வருட பிறந்த நாளை கொண்டாடி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார்.

பலரும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்