தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் வரவேற்பினை பெற்றவர் நக்ஷத்ரா நாகேஷ். இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. இந்த தொடரின் மூலம் பல குடும்பத்தலைவிகளையும் பெண்களையும் ரசிகர்களாக கொண்டு இருக்கிறார் நக்ஷத்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய இவர், வெள்ளித்திரையில் சில படங்கள் நடித்து உள்ளார்.

இந்த தொடரின் மூலம் மிக பிரபலமாக உருவெடுத்து உள்ளார். இந்நிலையில் எதிர்ப்பாராத நிலையில் சீரியல் முடிவுக்கு வந்து இருப்பது இவரின் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் அடுத்து விரைவில் தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் நவராத்திரிக்கு வீட்டில் கொழு வைத்து உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் நக்ஷத்ரா வீட்டு கொழு மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
