சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நக்ஷத்ரா நாகேஷ். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியாக நடித்து குடும்ப தலைவிகளை பெரிதும் கவர்ந்துள்ளார். இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. இந்த தொடரின் மூலம் பல இல்லங்களில் இவருக்கு என்று தனி இடம் உருவாகி இருக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய இவர், வெள்ளித்திரையில் சில படங்கள் நடித்து உள்ளார்.

இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய இடத்தை சின்னத்திரையில் உருவாக்கி உள்ளது. எதிர்பாராத நிலையில் சீரியல் முடிவுக்கு வந்து இருப்பது இவரின் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் அடுத்து விரைவில் தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் தனது கணவர் உடன் பாலி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
