Categories: சினிமா

சொந்த ஊரான கோயம்பத்தூரில் பண்ணை வீடு கட்டி குடியேறிய சிபி சத்யராஜ்.! கிரஹப்ரவேச புகைப்படங்கள் இதோ

வெளியிட்டது

நடிகர் சிபி சத்யராஜ் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் பண்ணை வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அதன் கிரகப்பிரவேச புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

சொந்த ஊரான கோயம்பத்தூரில் பண்ணை வீடு கட்டி குடியேறிய சிபி சத்யராஜ்.! கிரஹப்ரவேச புகைப்படங்கள் இதோ 1

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ் மற்றும் திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உண்டு.

தந்தையைப் போலவே சிபிக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த காரணத்தினால், இவரும் திரைத்துறைக்கு வந்தார். 2003ம் ஆண்டு வெளியான ‘ஸ்டூடன்ட் நம்பர் ஒன்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமனார்.


அதன் பின்னர் மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, சத்யா, வால்டர், ரங்கா, மாயோன், வட்டம் போன்ற பல படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

இவருக்கு கடந்த 2008ம் ஆண்டு சென்னையை சேர்ந்த மென்பொறியாளரான ரேவதி என்பவருடன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி வரும் சிபி சத்யராஜ், தற்போது தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் பண்ணை வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்.


அந்த வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


இந்த நிகழ்ச்சியில் தந்தை சத்யராஜ் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். புது வீடு கட்டி இருக்கும் சிபி ராஜுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்