தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக இருந்தவர் பாடகி சுசித்ரா. பல அற்புதமான பாடல்கள் உருவாக காரணமே இவரது குரல் எனலாம். இவர் தற்போது முழுவதுமே சினிமாவை விட்டு விலகி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது ட்வீட்டர் பக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு சினிமாவில் பாடல் பாடுவதை தவிர்த்து வந்தார் சுசித்ரா. மேலும் சில காலமாக பேட்டியளிக்காமல் இருந்த சுசித்ரா அண்மையில் அளித்த பேட்டியில் மிகப்பெரிய பிரபலங்கள் பெயர்களை இழுத்து அவர்கள் வீட்டு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறி இருந்தார். மேலும் தன்னுடைய முன்னாள் கணவர் ஓரினசேர்கையாளர் என்றும் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் சுசித்ரா. இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்து பாடகி சுசித்ரா பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில், அடுத்த ஜென்மத்தில் சூர்யாதான் தனக்கு கணவராக வேண்டும் எனவும், ஆயுத எழுத்து படப்பிடிப்பின் போது அவரை தான் ரசித்துக்கொண்டு இருந்ததாகவும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.