விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கடைக்கு போய்விட்டு வரும் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் விஜயாவுக்கு புடவை வாங்கி கொண்டு வருகின்றனர். அந்த புடவையை விஜயாவிடம் கொடுக்கவே சந்தோஷத்தில் வாங்கிக்கொள்கிறார். மேலும் புடவையை பார்த்த விஜயா, இதுபோல விலை அதிகமான புடவையை கல்யாணத்துக்கு முன்னாடி தான் உடுத்தியதாகவும்,
கல்யாணத்துக்கு பிறகு இதுபோல கிடைவில்லை என அண்ணாமலையை தாக்கி பேசுகிறார். இதனை பார்த்து முத்து செம்ம கடுப்பில் உள்ளார். தற்போது புடவை வாங்கி கொடுத்து விஜயாவை மனோஜ் மற்றும் ரோகினி ஏன் ஐஸ் வைக்கிறார்கள் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இந்த ப்ரோமோ தொடரின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்துள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION