விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில், மனோஜிடம் இருந்து காசை கைப்பற்ற பார்க்கிறார் ரோகிணி. அதற்கு மனோஜ் , நான் ஜீவாவை அதிகம் காதலித்ததால் அவளிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தேன், ஆனால் இனி அப்படி யாரிடமும் ஏமாறமாட்டேன் என கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியான ரோகிணி , என்னையும் நம்ப மாட்டியா என கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு மனோஜ் உன்னையும் அம்மாவையும் நம்புவதாகவும் , அதற்காக பணம் எல்லாம் தரமுடியாது என கூறுகிறார். இதனால் ரோகிணி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்.
Embed Video Credits : VIJAY TELEVISION