
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் மிக பெரிய கனவு என்றால் வாழ்வில் ஒரே ஒரு முறையாவது தேசிய விருதை வென்று விடவேண்டும் என்பதே. இந்திய சினிமாவின் மிக பெரிய கவுரவமான இந்த விருது 67 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வருகிறது. 2022 ஆண்டிற்கான அதாவது 68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.சிறந்த நடிப்பிற்காக சூர்யாவும், அபர்ணா பாலமுரளியும், சிறந்த படமாக சூரரை போற்று வென்றுள்ளது.
அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படம் கொரோன காலகட்டத்தால் OTT தளத்தில் வெளியானாலும் மாபெரும் வெற்றியை பெற்றது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, “பூ” ராமு முதலனோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். சுதா கொங்கரா இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள, ஹிந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்தற்காக ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதை அமைத்தற்காக ஷாலினி உஷாதேவி மற்றும் சுதா கொங்கரா வென்றுள்ளனர். மேலும் யோகிபாபு நடிப்பில் வெளியான “மண்டேலா” படமும் சிறந்த திரைக்கதைக்கான விருதைத் வென்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய மடோன்னே அஸ்வின் இந்த விருதை பெற்றுள்ளார்.