தேசிய விருது பெறுவதற்காக டெல்லி சென்ற சூர்யா மற்றும் ஜோதிகாவின் கேண்டிட் பிச்சர்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் லைக்ஸையும் குவித்து வருகிறது.

2020 ஆம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கான 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் தேர்வானது.

2020 ஆம் வருடம் சுமார் 30 மொழிகளில் 295 தேசிய விருதுகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் சூரரைப் போற்று படத்திற்கு மட்டும் ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தன.

இந்தப் படமானது, சாமானியன் கூட விமானத்தில் செல்ல வேண்டுமென்று ஏர் டெக்கான் நிறுவனத்தை தொடங்கிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது. இதில் கோபிநாத் ஆகவே வாழ்ந்திருப்பார் சூர்யா.

சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா முரளிக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாசுக்கும் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட சூர்யா, தனது குடும்பத்தினருடன் சென்று இருந்தார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் 2டி நிறுவனத்திற்காக ஜோதிகா விற்கும் விருது வழங்கப்பட்டது.

பட்டு வேஷ்டி சட்டையில் சென்று விருதை வாங்கினார் சூர்யா. அப்போது கீழிருந்து ஜோதிகா அவரை புகைப்படம் எடுத்தார். அதேபோல ஜோதிகா வாங்கும் பொழுது கீழிருந்து சூர்யாவை புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதுதான் கப்புல் கோல்ஸ் என்றும், இருவரையும் பார்க்க மிக அழகாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: Daily Culture