சன் தொலைக்காட்சியில் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘சந்திரலேகா’ என்னும் சீரியலில் ஹீரோயினாக நடித்த ஸ்வேதா பண்டேகர் தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார். அந்த அழகிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த ஸ்வேதா, அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியிருந்தார்.
பின்னர் பூவா தலையா, மீராவுடன் கிருஷ்ணா, நான் தான் பாலா, வள்ளுவனும் வாசுகியும், பூலோகம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் சின்னத்திரைக்கு வந்த அவருக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ தொடர் திருப்புமுனையை கொடுத்தது.
சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த அவர், 37 வயதில் சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மால் மருகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ஸ்வேதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார். அவருக்கு எளிமையான முறையில் வீட்டிலேயே வளைகாப்பும் நடைபெற்று இருந்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது. தொடர்ந்து தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார் ஸ்வேதா.
கிருஷ்ணா மற்றும் சர்வஸ்ரீ என்று குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பலரும் ஸ்வேதா மற்றும் மால் மருகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.