Categories: சமூகம்

பெண் செவிலியரை அறைந்த கோவில் பூசாரி தலைமறைவு!!

வெளியிட்டது
பெண் செவிலியரை அறைந்த கோவில் பூசாரி தலைமறைவு!! 1

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் செவிலியர் ஒருவரை கோயில் அய்யர் கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிதம்பரம் வ.வு.சி தெருவைச் சேர்ந்த செல்வ கணபதி என்பவரின் மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமைச் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார்.

லதா சனிக்கிழமை இரவு நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு அர்ச்சனை செய்ய வந்தார். முக்குருணி விநாயகர் சன்னிதியில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்யுமாறு குருக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அர்ச்சனை செய்யாமல், வெறும் தேங்காயை மட்டும் தீட்சிதர் உடைத்துக் கொடுத்ததாகக் புகார் செய்தார். இதனையடுத்து லதா, ஏன் அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்ட போது அவரை பூசாரி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரத்தில் லதாவின் கன்னத்தில் அறைந்ததால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அருகில் இருந்த சகபக்தர்கள் தீட்சிதரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிதம்பரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், தீட்சிதர் தர்சன் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தீட்சிதர் தர்சன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்