அர்ஜுனை கடத்தி வந்து கட்டி வைத்து அடித்து துவைக்கும் தமிழ்.! தரமான சம்பவம் பண்ணிடீங்க தமிழ்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் தற்போது தமிழ் அர்ஜுனை கடத்திச் சென்று ஒரு இடத்தில் வைத்து கட்டையால் அடித்து உதைத்து கொண்டிருக்கிறார்் அப்போதுதான் அர்ஜூன் உண்மையை கூறுவார் என்று சொல்லி தமிழ் இந்த முடிவை எடுத்து அர்ஜுனை கட்டி வைத்து அடிக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் பலரும் தமிழில் இந்த முடிவை வரவேற்று வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனை கடத்தி வந்து கட்டி வைத்து அடித்து துவைக்கும் தமிழ்.! தரமான சம்பவம் பண்ணிடீங்க தமிழ்.! 1

மேகனாவை கொலை செய்து நடுரோட்டில் வீசிவிட்டு அர்ஜுன் அனுப்பிய ரவுடிகள் செல்கின்றனர். ஆனால் இந்த பழி சரஸ்வதி மீது விழுகிறது. சரஸ்வதிக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வந்த ஆட்டோ ஓட்டுநரையும் அர்ஜுன் சதி செய்து மாற்றி சாட்சி சொல்ல வைக்கிறார். இதனால் கோபமடையும் தமிழ் அர்ஜுனை தற்போது காரில் கடத்திச் சென்று ஓரிடத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். அவரிடமிருந்து உண்மையை வாங்குவதற்காக தமிழ் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இத்தனை காலமாக ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தொடர்ந்து வில்லன் அர்ஜுன் கையே ஓங்கிக் கொண்டிருக்கிறது. அவர் எது செய்தாலும் தமிழுக்கு வினையாகவே முடிந்து விடுகிறது.

இந்த முயற்சியில் தமிழ் வெற்றி பெற வேண்டும், சரஸ்வதியை சிறையில் இருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்