எப்போதும் விஜய் டிவி தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கமே. ஒரு தொடர் முடிந்த பின் மற்றொரு தொடர் சிறப்பாக மக்களின் வரவேற்பை பெரும். அப்படி, தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. ஆனந்தம் படம் தழுவலாக மளிகை கடை பின்னனியில் இந்த தொடர் உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூர்த்தி, கதிர், ஜீவா, தானம் என்ற முக்கிய கதாபாத்திரங்களுடன் அண்ணன் – தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க பார்த்து வருகிறார்கள். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.
இதில் நடித்ததற்காக விஜய் டிவியின் சின்னத்திரை விருதுகளையும் இந்த தொடர் நட்சத்திரங்கள் வாங்கியுள்ளனர். 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடக்கவில்லை. சில முறைகள் மட்டுமே நடிகை சித்ரா இறந்த போதும், மற்றொரு நடிகை தீபிகா விலகிய போதும் மற்றம் நடந்தது. அந்த வகையில், தற்போது, புதிய நடிகர் ஒருவர் நடிக்க வந்துள்ளார்.
தொடரில் குமரேசன் மாமா என்ற வேடத்தில் நடித்து வந்த நெல்லை சிவா அவர்கள் உயிரிழந்த நிலையில், சிறிது காலமாகவே அவருடைய கதாபாத்திரம் இந்த தொடரில் தோன்றாமலேயே இருந்தது. இப்பொது அவருடைய கதாபாத்திரத்தில் மற்றொரு நபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். காண காணும் காலங்கள் தொடரில் பச்சையும் என்னும் கதாபத்திரத்தின் தந்தையாக தோன்றி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற தேனீ முருகன் இப்பொது குமரேசன் மாமா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர் சினிமாவிலும் நிறைய காமெடி கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வாரம் இந்த அறிமுகத்திற்கு பின் சென்று கொண்டிருக்கும் தொடரில் இப்போது வேலை எதுக்கும் கிடைக்காமல் தவிக்கும் கதிர் மற்றொரு கூலி வேலைக்கு செல்ல தயாராகிறான். ஆனால் முல்லையோ “வேலைக்கு எதுக்குங்க, உங்களுக்கு தான் ஹோட்டல் தொழில் தெரியும்ல, நாமளே ஒரு ஹோட்டல் வைத்தால் என்ன” என அறிவுறுத்திகிறாள். கதிரும் சிந்திக்க தொடங்குகிறான்.
இந்நிலையில், ஹோட்டல் கடை துவங்கவுள்ள முல்லையும் கதிரும் நேரில் சந்தித்து அண்ணி தனத்திடம் ஆசிர்வாதம் பெற அவர்களின் கடைக்கு செல்கிறார்கள். அப்போது குழந்தையும் அங்கிருக்க, “அண்ணி, நாங்க ஒரு சின்ன ஹோட்டல் துறக்கப்போறோம் அண்ணி’னு” சொல்ல, “கதிரிடம் தனம் பேசாமல், “ஜீவா பொருள் வேணும்னா நம்ப கடையிலேயே போய் எடுத்துக்க சொல்லு” என கதிரிடம் பதில் கூறாமலே நிற்கிறாள். இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Video Courtesy – Vijay Television