
‘கைதி’ படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு தமது நன்றி போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என நடிகர் கார்த்தி தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கைதி படக்குழு இதயத்தில் இருந்து கதையை வடிவமைத்து, தயாரித்ததாக கூறி உள்ளார்.
விளம்பரம்
அதேநேரம் இவ்வளவு பெரிய வெற்றி படமாக மாற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என நன்றி தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி தமது இதயப்பூர்வமான நன்றி ரசிகர்களுக்கும், படக்குழுவினரக்கும், உரித்தாக்குவதாக கூறியுள்ளார். வெற்றியை தந்த அனைவரையும் நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
விளம்பரம்