சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் திடீரென மேடையில் நடிகை உடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிறிய பாத்திரக்கடையாக ஆரம்பித்து, தற்போது சென்னையின் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பது சரவணா ஸ்டோர்ஸ். வீட்டிற்கு தேவையான குண்டூசி தொடங்கி மிகப்பெரிய பாத்திரங்கள் வரை துணிமணிகள், தங்க நகைகள் என சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி இருக்கிறார் இதன் உரிமையாளரான அருள் சரவணன். இந்த கடை 1973 ஆம் ஆண்டு அருள் சரவணனின் தந்தையான செல்வரத்தினம் அவர்களால் ஒரு சிறிய பாத்திரக் கடையாக தி நகரில் தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களது அயராத உழைப்பின் காரணமாக தற்போது இது இவ்வளவு பெரிய சாம்ராஜ்யமாக உயர்ந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தனது கடையின் விளம்பரத்திற்காக விளம்பர படங்களில் நடித்த தொடங்கினார் அருள் சரவணன். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் ஆசை வரவே, சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தி லெஜெண்ட் என்ற படத்தில் தானே நடித்தார். இந்த படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் பலரும் அண்ணாச்சியையும், அவரின் நடிப்பையும் கழுவி ஊற்றிய போதிலும் 12 நாட்களில் வசூலில் 12 கோடியை தாண்டி சென்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு அறிமுக நடிகரின் படம் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாகி இத்தனை கோடி வசூலை அள்ளி இருப்பது இதுவே முதல் முறையாகும். உலகம் எங்கும் ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம், சுமார் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்கள் வரை திரையிடப்பட்ட இந்த படத்தை பலரும் தங்களது குடும்பங்களாக சென்று பார்த்து வருகின்றனர். இதன் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த அருள் சரவணன், அந்தப் படத்தின் நடிகைகளான ஊர்வசி ரவுத்தோலா மற்றும் ராய் லட்சுமி உடன் இணைந்து மேடையில் திடீரென குத்தாட்டம் போட்டார். இதை பார்த்த பலரும் அண்ணாச்சி நல்லா வாழ்கிறார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர் அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video…
Youtube Video Code Embed Credits: INFINITE TALKS