Categories: சினிமா

மனதை வருடும் அனிருத் குரலில், திருச்சிற்றம்பலத்தின் 3வது பாடல் வெளியானது..!

வெளியிட்டது

தனுஷின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது. தனுஷ் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். நாளை அவரது வாத்தி படத்தின் டீசர் வெளியாக உள்ளது. சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிளான மேகம் கருக்காதா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் இப்போது ஆகஸ்ட் 18, 2022 அன்று திரைக்கு வரும் என்று நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். வீடியோ சாங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனதை வருடும் அனிருத் குரலில், திருச்சிற்றம்பலத்தின் 3வது பாடல் வெளியானது..! 1

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷும் அனிருத்தும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் அவர்களிடமிருந்து ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம். தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல் கதைகள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும் நடந்துள்ளது.

தனுஷ் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைகிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.தற்போது இந்த படத்தின் மூன்றாவதுய் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடலான மேகம் கருக்காதா என்ற வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Anirudh Ravichandar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்