இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் இப்போது ஜூலை 1, 2022 அன்று திரைக்கு வரும் என்று நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷும் அனிருத்தும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் அவர்களிடமிருந்து சார்ட்பஸ்டர் இசை ஆல்பத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரஙகளில் நடிக்கின்றனர்.
உதயநிதி தனது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படமான ‘நெஞ்சுக்கு நீதி’ குறித்த பேசும் போது, தன்னுடைய ரெட் ஜேயண்ட் மூலம் தமிழகத்தில் வெளியாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஜூலை 1, 2022 அன்று திரைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். கதை இரண்டு காலகட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது – கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம். தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல் ஆர்வங்கள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும். தனுஷ் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைகிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரேன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.