விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தயாரித்து வந்த நிறுவனம் மீடியா மேசன். இந்த நிறுவனம் தனது நிகழ்ச்சிகளை சிறப்பாக கொடுத்து மக்களை கவலை மறந்து சிரிக்க வைத்து இருந்தது. விஜய் டிவியுடன் ஏற்பட்ட தகராறினால் தற்போது அங்கிருந்து முழுவதுமாக சன்டிவிக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் மாறி உள்ளது. சன்டிவியில் இந்த நிறுவனம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வந்தது.

இந்த நிகழ்ச்சியில் டூப் குக்குகளாக அதிர்ச்சி அருண், மோனிஷா, ஜி.பி. முத்து, தீபா, பரத், தீனா ஆகியோர் என்ட்ரி கொடுத்து தங்களது நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைத்து இருந்தனர். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருந்தது. இந்த போட்டியில் போட்டியாளர்கள் பலரும் வித விதமாக உணவுகளை சமைத்து அசத்தி இருந்தனர்.

போட்டியாளர்கள் சமைத்த உணவை கண்டு நடுவர்கள் மிரண்டு உள்ளனர். அந்தளவிற்கு சமையலில் அசத்தி இருந்தனர். தற்போது இறுதிப்போட்டியில் நரேந்திர பிரசாத் மற்றும் நடிகை சுஜாதா ஆகியோர் டைட்டிலை வென்று ரூ.20 லட்சத்தை வென்று உள்ளனர். அவர்களுக்கு சன்டிவி பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றது.
View this post on Instagram