
இப்போதைய தமிழ் சினிமாவின் ஹாட் நியூஸ் லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” படம் தான் .கிட்டத்தட்ட நான்கு வருட தவமாக காத்திருந்த கமல் ரசிகர்கள் தற்போது விக்ரம் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இப்போதைய நடிகர்களில் மிகவும் சந்தோசமாக இருக்கும் பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன், நடிகர் கமலஹாசன் தான். 4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார்.
அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியாகி இப்பொது வரையில் 400 கோடி வசூலை ஈட்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் மிரட்டியுள்ள கமலிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். உடன் நடித்த விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் கடைசி ஐந்தே நிமிடங்களில் வந்து மொத்த ரசிகர்களையும் தன்னுடைய வில்லதனத்தால் மிரட்டி எடுத்துள்ள சூரியா என அனைவருமே மெச்சும் படி தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். அனிருத்தின் இசை, லோகேஷின் நேர்த்தியான கதை அமைப்பு என பாராட்டுகளை குவித்தவண்ணம் உள்ளது படம்.
படம் வெளியான முதல் காட்சி துவங்கியே ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தனர். படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் மாபெரும் வகையில் நடைபெற்று முடிந்துள்ளது. இயக்குனர் லோகேஷ், கமல்ஹாசன், அனிருத், உதயநிதி என பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர். மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ள கமல் கிடப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்தை முடித்துவிடும் எண்ணத்தில் இருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் உருவானது. கொரோனா லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்காமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலேயே இருந்தன. இதனால் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஷங்கர்.
அதன்படி லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2, பொன்னியின் செல்வன், பொன்னியின் படங்களின் சாட்டிலைட் மற்றும் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலமாக கிடைக்கும் பணத்தை வைத்து ‘இந்தியன் 2’ பட வேலைகளை துவங்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.