இரண்டு நாளைக்கு முன்பு பீகார் மாநிலம் சமிஸ்டிபூர் பகுதியை சேர்ந்த 65 வயது ரோசன்லால் தனது மகன் திருமணத்தன்று ஓடி விட்டதால் 21 வயதான பெண்ணை தானே திருமணம் செய்து கொண்டார். அந்த வீடியோவை சமூக தளங்களில் வைரலானது. தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி விநோதமானது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் மணமகன் தாலி கட்டிய பின்பு 10 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளார். இதனால் கடுப்பான பெண் வீட்டார் மணமகனை அடித்து துவைத்து விட்டனர். அந்த வீடியோவை நீங்களும் காண Watch the below video..
திருமணங்களில் நடக்கும் காமெடிகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது. திருமண வீடுகளில் பல காமெடிகள் அரங்கேறி வருகின்றன. funny videos என்று இணையத்தில் தேடும் போது இது போன்ற திருமணத்தில் நடக்கும் காமெடி வீடியோக்கள் முதலில் வருவது வழக்கமாகி போய்விட்டது. மணமக்கள் தலையில் அரிசிக்கு பதிலாக பாலை ஊற்றுவது, மாலை போடும் போது வேஷ்டி அவிழ்த்து விழுவது, குதிரையில் அமர்ந்து மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் போது தீடீரென குதிரை மிரண்டு ஓடி மாப்பிள்ளையை கீழே தள்ளி விடுவது, மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை உடைந்து மணமகளும், மணமகனும் கீழே விழுவது போன்ற தமாஷான நிகழ்வுகள் அரங்கேறி வரும். அது மட்டுமில்லாமல் மாலையை ஒழுங்காக போடாமல் மணமகனிடம் அறை வாங்குவது போன்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கின.

நம் நாட்டில் நடக்கும் பல விதமான காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் நடக்கும் காமெடி சம்பவங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களை அள்ளும் யூடியூப் சேனல்கள் ஏராளம். வட இந்தியா என்று டைப் செய்தாலே Funny Marriage Video என்று யூடியூப்பே Suggestion காட்டும் அளவிற்கு பிரபலமானவர்கள் தான் வட இந்தியர்கள். சமீபத்தில் கூட பாக்கெட்டில் பான் பொருட்கள் வைத்திருந்த காரணத்தால் மணமனை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த மணமகளின் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.