சன் தொலைக்காட்சியில் வானத்தைப்போல சீரியலில் நடித்து வந்த நடிகைக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வருவது வழக்கமாக இருக்கிறது.
நேற்றைய தினம் கூட பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சத்தமில்லாமல் திருமணத்தை முடித்திருந்தார். இந்த நிலையில் இன்றைக்கு ‘வானத்தைப்போல’ என்கிற சீரியலில் துளசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஸ்வேதாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை தற்போது ஸ்வேதா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் ‘வானத்தைப்போல’ சீரியலில் நடித்த பிரபலமானவர் நடிகை ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் துளசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரை இவருக்கு வாங்கி கொடுத்த போதிலும் திடீரென சீரியலை விட்டு விலகி இருந்தார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக ஸ்வேதா அறிவித்திருந்தார்.
தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்கிற சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்வேதாவிற்கு கர்நாடகவை சேர்ந்த மது சங்கர் கௌடா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அந்தப் புகைப்படங்களை ஸ்வேதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு ‘கண்ணெதிரே தோன்றினாள்’ மற்றும் ‘வானத்தைப்போல’ சீரியல் நடிகர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ஸ்வேதாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..!