நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மகள் தான் வனிதா விஜயகுமார். தந்தையை போலவும் தாயை போலவும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய இவருக்கு பெரும் வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. இதனால் மனம்தளர்ந்த இவர் சினிமாவை விட்டு முழுவதும் விலகினார். மேலும் குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் வீட்டை விட்டு வெளியேறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் சண்டையிட்டு மக்களை கவர்ந்து இருந்தார் வனிதா. பின்னர் இவர் கலந்துகொண்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யாகிருஷ்ணனிடம் சண்டையிட்டு அங்கிருந்தும் வெளியேறினார்.

தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி தற்போது பிக் பாஸ் 8வது சீசன் தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி வரும் வனிதா. ரவிந்தருக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே நான் தான் என கூறியுள்ளார். மேலும் முத்துக்குமரன் சிறந்த அறிவாளி எனவும், தன்னை பேட்டி எடுக்கும் பொழுது தனது திருமண வாழ்க்கை பற்றி தொடர்ந்து கேட்டதாகவும் கூறி உள்ளார் வனிதா.