Categories: சினிமா

சந்தோஷ் நாராயணன் குரலில் வாழை படத்தின் “ஒரு ஊருல ராஜா” First Single வெளியாகியது…!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ். குறைந்த படங்களே தமிழ் சினிமாவில் இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். இவர் இயக்கிய மாமன்னன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் குரலில் வாழை படத்தின் "ஒரு ஊருல ராஜா" First Single வெளியாகியது...! 1

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழை. இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் பிரியங்கா நடித்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், உருவாகி உள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மாரி செல்வராஜ் எழுதி இருக்கும் இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து உள்ளதாகவும், படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளதாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Embed Video Credits : THINK MUSIC INDIA

வெளியிட்டது

புதிய செய்திகள்