அறிமுகமான 2வது படத்துலே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார் நயன்தாரா. தொடர்ந்து விஜய்,அஜித், தனுஷ், தெலுங்கில் பிரபாஸ்,நாகார்ஜூனா,வெங்கடேஷ்,ஜூனியர் என்.டி.ஆர் போன்ற தமிழ் தெலுங்கு இரு மொழி முன்னணி நாயகர்களுடன் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார்.
நடுவில் சிம்புவுடன் காதல், திருமணமான பிரபுதேவா மனைவியுடன் சக்காளத்தி சண்டையெல்லாம் போட்டு, இப்போ மீண்டும் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். “நானும் ரவுடி தான்” படத்தில் இயக்குனர் விக்னேஷ் ஷிவனுடன் ஏற்பட்ட நட்பு பின் காதலாக மாறி இப்போது கல்யாணம் வரை வந்துள்ளது. ஏற்கனவே வருகிற ஜூன் 9ஆம் தேதி இருக்கவருக்கும் திருமணம் என் அறிவிப்பு வேலையகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அண்மையில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவரும் கூட்டணியில், சிறப்பான அனிருத் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “கத்துவாக்குல ரெண்டு காதல்” படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் கண்மணியாக நடித்திருக்கும் நயன்தாராவும், கதிஜாவாக நடித்திருக்கும் சமந்தாவும் உரையாடும் ஒரு வாட்ஸ் ஆஃப் உரையாடல் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
படம் வருகிற 27ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை இந்த உரையாடல் மூலம் நூதன முறையில் அவர் விளம்பரம் படுத்தி வருகிறார். இது இப்பொது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.