இன்று காலை ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு நெகட்டிவ் ரிவ்யூ சொன்ன விஜய் ரசிகர் ஒருவரை ரஜினி ரசிகர்கள் அனைவரும் இணைந்து தாக்கி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி விஜய் ரசிகர்களுக்கிடையே சர்ச்சைகள் நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில் தற்போது கூடுதலாக இந்த சர்ச்சையும் சேர்ந்து கொண்டது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா அல்லது விஜயா என்கிற சர்ச்சை சமீப காலமாக எழுந்து இருக்கிறது. விஜய் நடித்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என பேசி சர்ச்சையை தொடங்கி வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை விஜய் – ரஜினி ரசிகர் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக கடுமையாக மோதிக் கொண்டு வந்த விஜய் ரஜினி ரசிகர்களின் மோதல் தற்போது கைகலப்பு வரை சென்றிருக்கிறது. இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த படத்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என்ற கருத்தை கூறியிருந்தார்.
அவர் பேசி முடிப்பதற்குள் அவர் அங்கு திரண்டு இருந்த ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கத் தொடங்கினர். அவர் உடன் வந்தவர்கள் எவ்வளவோ தடுக்க முயன்றும் அந்த ரசிகரை அவர் சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
இது குறித்து தற்போது விஜய் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஜெயிலர் ஒரு பேரழிவு (JailerDisaster) என்று ஹேஷ் டேக்கையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த ரசிகரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக தற்போது அஜித் ரசிகர்களும் இணைந்து கொண்டிருக்கின்றனர். ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இருவரும் இணைந்து தற்போது விஜய் ரசிகர்களுக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக கமல் ரசிகர்கள் கைகோர்த்து இருக்கின்றனர்.
அஜித் – ரஜினி, விஜய் – கமல் என்கிற ரீதியில் சண்டை சமூக வலைத்தளங்களில் போய்க்கொண்டிருக்கிறது் குறிப்பாக ட்விட்டரில் இந்த மோதல்கள் அதிகரித்து வருகிறது் பலரும் காரசாரமான ட்வீட்டுகளையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.