“இத தான கேட்டுட்டே இருந்த, இந்த பாத்துக்கோ”!!!குடிபோதையில் ராதிகாவிடம் பாக்கியத்தின் புகைப்படத்தை காட்டிவிடும் கோபி!!அதிர்ச்சியில் உறைந்து போன ராதிகா!!!

வெளியிட்டது

விஜய் டிவியில் இப்போது முக்கிய தொடராக ரசிகர்களால் கவனிக்கப்படுவது பாக்கியலட்சுமி. திருமணமான கோபி, மனைவி பாக்கியவிற்கு தெரியாமல் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவுடன் திருமணத்திற்கு ஆயுதம் ஆகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்ற வாரம் ஊரிலிருந்து வந்த குன்னக்குடியை சேர்ந்த மூர்த்தி கோபி ராதிகாவுடன் இருப்பதை பார்த்து கோபமுற்று அவரிடம் இதனை குறித்து கேட்கிறார். ஆனால் இதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாத கோபி, ஊருக்கு கிளம்பும் மூர்த்தியை மிரட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.

நேராக ராதிகாவிடம் சென்று நீங்கள் திருமணம் செய்து கொள்ள போற கோபி நல்லவர் இல்லை என மட்டும் பொரி வைத்து  பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். விஷயம் தெரிந்த மூர்த்தியின் மனைவி தனமும் பாக்கியவிடம் பார்த்து இருந்துக்கோங்க என கூறி ஊருக்கு சென்று விடுகிறார்கள்.

"இத தான கேட்டுட்டே இருந்த, இந்த பாத்துக்கோ"!!!குடிபோதையில் ராதிகாவிடம் பாக்கியத்தின் புகைப்படத்தை காட்டிவிடும் கோபி!!அதிர்ச்சியில் உறைந்து போன ராதிகா!!! 1

கோபியின் மேல் சந்தேகம் வர ராதிகா கோபியுடன் சண்டைக்கு நிற்கிறார். உன் குடும்பத்தை பார்க்காமல் நான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன், என கூறி கோபியை திட்டி அனுப்பி விடுகிறார்.

வீட்டிற்கு லேட்டாக வரும் கோபியை பாக்கிய பேச முறைப்பட, கோபி கோபத்தில் கத்தி அவளை அனுப்பிவிடுகிறான். மறுநாள் கோபி ராதிகா வீட்டிற்கு போக மறுபடியும் அவள் நான் உங்கள் குடுமபத்தை பார்த்தே ஆகா வேண்டும் என கூறுவதால், என்ன செய்வது என்று தெரியாமல் குடித்துவிட்டு மீண்டும் போதையில் அவள் வீட்டிற்கு வருகிறார் கோபி.

போதையில் அவள் கேட்கும் தன்னுடைய குடும்ப படம் அதாவது கோபியும், பாக்கியவும் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய செல்போனில் காட்டிவிடுகிறான், அதிர்ச்சியில் உறைந்து போகும் ராதிகா இது டீச்சர் அக்கா, என தலையில் கை வைத்து கீழே உட்கார, கோபி ஆமா “உன்னோட டீச்சர் அக்காவேதான்” என கூறிவிடுகிறேன்.

இவ்வாறாக இந்த வாரம் நகர இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கதை இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video Courtesy – Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்