Categories: சினிமா

கேப்டனின் 33வது திருமண நாள்.! பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளை போல வந்த கேப்டன்.!

வெளியிட்டது

விஜயகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்த விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தற்போது அவரை நேரில் சந்தித்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அவர், தனது உயிரை பார்த்து விட்டதாக தெரிவித்துள்ளார். சந்திர சேகரை பார்த்த விஜயகாந்த் அவரது கையைப் பிடித்து முத்தம் கொடுத்து இருக்கும் புகைப்படம் விஜயகாந்தின் தொண்டர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு திமுக, அதிமுக என்னும் இரு துருவங்களை எதிர்த்து தேமுதிக என்னும் மாபெரும் அரசியல் கட்சியை தொடங்கியவர் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் கட்சியை ஆரம்பித்தார். முதல் தேர்தலிலேயே 10 சதவீத வாக்குகளை பெற்று அன்றைய இரு பெரும் தலைவர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரையும் ஆச்சரியத்தில் ஆக்கினார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் 29 எம்எல்ஏக்களை பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த்.

கேப்டனின் 33வது திருமண நாள்.! பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளை போல வந்த கேப்டன்.! 1

ஆனால் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்த் இருக்கும் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் தேமுதிகவின் சரிவு ஆரம்பித்தது. பல எம் எல் ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். இதனால் மணமுடைந்து போன விஜயகாந்த் அடுத்தடுத்த தேர்தல்களில் துவண்டு போனார். தொடர்ந்து நடந்த பல தேர்தல்களில் தோல்வியையே சந்தித்தது தேமுதிக. இதனால் விஜயகாந்த் மனதளவில் மிகவும் துவண்டு போனார்.

]

மேலும் உடல் நலனும் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதால் சரியாக பேச முடியவில்லை என்று அவரது மனைவி பிரேமலதா விளக்கம் அளித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தை யாரும் சந்திக்க முடியவில்லை என்று பலரும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதேபோல் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் தான் 17 படங்களில் விஜயகாந்த் உடன் நடித்திருப்பதாகவும், அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்தபோது தனது மிகவும் வேதனையாக இருந்ததாகவும் பேட்டிகளில் கூறி வந்தார்.


மேலும் தனது நண்பன் விஜயகாந்தை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று அவர் பேட்டிகளில் கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் இந்த விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற அவர் விஜயகாந்தை சந்தித்திருக்கிறார். சந்திரசேகரை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்ட விஜயகாந்த், அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்து இருக்கும் புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த எஸ்ஏ சந்திரசேகர் எனது உயிரை பார்த்து விட்டேன் என்று பதிவிட்டு இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்தின் புகழும் படம் வெளியாக இருப்பதால் தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்