
கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வரும் நிலையில் கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கொண்டு விராட் கோலி சென்றுள்ளார்.
அங்கு அவர் பல விளையாட்டுகளை செய்து குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்துவிட்டு தனது முகத்தில் ஒட்டியிருந்த தாடியை கோலி அகற்றிய உடன் கோலியை அடையாளம் கண்ட குழந்தைகள் ஓடிவந்து அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.