
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு பேர் பலியானதாகவும் 5096 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
நேபாளத்தில் மே மாதம் முதல் டெங்கு காய்ச்சல் நாடெங்கும் பரவியுள்ளதாக அந்நாட்டின் தொற்றுநோயியல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பிரிவு (இ.டி.சி.டி) தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் தாரன் நகரில் தான் முதன்முதலில் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் பரவிவருவதை அறிந்தனர். தாரன் நகரிலுள்ள இமயமலை நாட்டின் 77 மாவட்டங்களில் 56 மாவட்டங்களில் பரவியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொற்றுநோயியல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பிரிவின் (இ.டி.சி.டி) படி, இதுவரை, நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோய்கள் பதிவாகியுள்ளன, குறைந்தது 1,170 வழக்குகள் பதிவாகியுள்ளன, காத்மாண்டு மற்றும் சிட்வான் முறையே 1,128, 728 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நேபாளத்தில் டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் அரசும் பரவி வரும் நோய்யை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் டெங்கு விரைவாக பரவிவருவதாக கூறுகின்றனர்.
பல வளரும் நாடுகளில் சமீபத்திய ஆண்டுகளில் டெங்கு ஒரு முக்கிய சுகாதார கவலையாக உருவெடுத்துள்ளது. டெங்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ்களை பரப்பும் முக்கிய திசையன் ஏடிஸ் ஈஜிப்டி கொசு ஆகும். தேங்கி நிற்கும் நீர் ஏராளமாக இருப்பதால் கொசு எளிதில் பெருகிவருகின்றன. ஆதலால் நீர் தேங்காமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.