உலகில் தொற்றுநோய்களால் அபாயம்! – சர்வதேச நிபுணர் குழு எச்சரிக்கை.

வெளியிட்டது
உலகில் தொற்றுநோய்களால் அபாயம்! – சர்வதேச நிபுணர் குழு எச்சரிக்கை. 1

மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று உலகப் பொருளாதாரத்தில் அழிவை ஏற்படுத்தக்கூடிய தொற்றுநோய்கள் உலகத்தை அச்சுறுத்துகிறதாக சர்வதேச நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த அபாயத்தை எதிர்க்கத் தயாராகவும் தணிக்கவும் அரசாங்கங்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

“உலகம் முழுவதும் ஒரு தொற்றுநோய் பரவுவதற்கான அச்சுறுத்தல் உண்மையானது. அது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும்”

என்று குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து கூட்டிய உலகளாவிய ஆயத்த கண்காணிப்பு வாரியம், எபோலா, காய்ச்சல் மற்றும் சார்ஸ் (கடுமையான சுவாச நோய்க்குறி) போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்ட தொற்றுநோய்களை உலகில் நிர்வகிக்க மிகவும் கடினமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

ஒரு தொற்றுநோயைப் பொறுத்தவரை, பல தேசிய சுகாதார அமைப்புகள், குறிப்பாக ஏழை நாடுகளில் சரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 1918 ஆம் ஆண்டு “ஸ்பானிஷ் காய்ச்சல்” தொற்றுநோயை இந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது, இது 50 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது.

சர்வதேச நிபுணர் குழு

ஒரு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் வெறும் 36 மணி நேரத்தில் உலகம் முழுவதும் பரவி மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லக்கூடும்

என்றும் அறிக்கையில் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காய்ச்சலின் மற்றொரு தொற்றுநோய் ஏற்படவுள்ளதாகவும் இது வான்வழி வைரஸ்களால் ஏற்படுகிறது மற்றும் தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார். உலகம் அதற்குத் தயாராக வேண்டும் என்றும் கூறினார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்