
அமெரிக்க நிறுவனம் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) கலந்திருப்பதாக யு. எஸ் சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிருந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஆன்லைனில் வாங்கப்பட்ட ஒரு ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பாட்டிலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கல்நார் அளவைக் கண்டறிந்ததை யு.எஸ். சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, சுமார் 33,000 பாட்டில்களை 130 ஆண்டுகள் பழமையான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இப்பொருளில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக முதன்முறையாக கண்டு பிடித்துள்ளனர். அஸ்பெஸ்டாஸ் ஒரு அறியப்பட்ட புற்றுநோயாகும். இது கொடிய மீசோதெலியோமாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் பேபி பவுடர் உள்ளிட்ட டால்கம் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளை நுகர்வோர் தொடர்ந்துள்ளனர். ஒரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கண்டறியப்பட்டாலும் மற்றொரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்று அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆதலால் ஆஸ்பெஸ்டாஸ் இருக்கும் தொகுப்பிலுள்ள பவுடர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்றும் தற்போது மீண்டும் ஆய்வுகள் செய்து வருவதாக அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வளர்ச்சியில் 6 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.