படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் என்பதை விட நிறையவே நெகட்டிவ் விமர்சனங்கள் தான். அனைவரும் கலாய்க்கும் படியான படம் என்றாலும் இப்போதும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டது வரும் நபர் லெஜெண்ட் அண்ணாச்சி. தானே தயாரித்து நாயகனாக அறிமுகமான முதல் படத்திற்கே மிக பெரிய பொருட்செலவு, நிறையவே நடிகர்கள் பட்டாளம், சிறப்பான இசை என இருந்த போதிலும் படத்தில் நிலையான நன்றான கதை இல்லாத காரணத்தால் படம் இந்த விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்த படத்தில் முதலில் நிறையவே முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அண்ணாச்சியுடன் நடிக்க அனைவருமே மறுத்துவிட்டனர். குறிப்பாக இந்த பேச்சுவார்த்தைகள் நயன்தாராவிடம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் பிறகே படத்தில் புதுமுக நாயகி கிதிகாவும், பிரபல ஹிந்தி நடிகை ஊர்வசி ரௌட்டலா அறிமுகமும் ஆனார்கள். இப்போது இந்த படத்தில் இருந்து கிசுகிசுக்க தக்க செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் நடிப்பதற்கு நடிகை ஊர்வஷிக்கு 20 கோடிக்கு கிட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக இரண்டு நாளாகவே செய்திகள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றன.

ஆனால் படத்தின் ப்ரோடுச்டின் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் படத்திற்கு 20 கோடியெல்லாம் அவருக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் அறிமுக நாயகி ஒருவருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். இவ்வளவு தொகைக்கு அவரை நடிக்க வைக்க காரணமாக கூறப்படுவது படத்தில் நாயகன், தயாரிப்பாளர் சரவணன் நயன்தாராவை மிஞ்சிய ஒரு நடிகை நடிக்க வேண்டும் என்பதிலேயே என்கின்றனர் இப்பொது பலரும்.