திருச்சிற்றம்பலம் பற்றி பொது மக்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த படம் நன்றாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கர்ணன் படம், திரையில் வெளியானது. அடுத்ததாக வந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் ஓடிடி தளங்களில் மட்டுமே வெளியாகி இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படம் திரையில் வெளியாவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார் தனுஷ். இவர் அடுத்ததாக வாத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு திருச்சிற்றம்பலம் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக பலரும் தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர். திருச்சிற்றம்பலத்தை இயக்குனர் மித்ரன் ஜவகர் அவர்கள் இயக்கியிருக்கிறார். இவர் கடைசியாக தனுசை வைத்து இயக்கிய படம் யாரடி நீ மோகினி. இந்த படம் மிகப்பிரமாண்ட வெற்றியை கொடுத்தது. அதேபோன்ற ஒரு படத்தை பல ஆண்டுகளுக்குப் பின்னர் தனுசுடன் இணைந்து கொடுத்திருக்கிறார் மித்ரன் ஜவகர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். படத்தில் நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா என்று 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படத்தில் பேசப்படுபவர் ஆக நித்யா மேனன் இருக்கிறார். இவர் தனுஷின் தோழியாக ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் வெளியான போதே பலரும் ட்விட்டரில் படம் நன்றாக இருப்பதாகவும், விஐபி, யாரடி நீ மோகினி போன்ற படங்களை பிரதிபலிப்பது போல இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் சோபனா போன்ற ஒரே நல்ல நட்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் படம் பார்த்துவிட்டு முதல் காட்சி முடிந்து வெளியே வந்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். படத்தில் சண்டை காட்சிகள் அவ்வளவாக இல்லை, காமெடிகள் இல்லை ஆனால் ஒரு காதல் படம் எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மக்கள் கூறிய கருத்துக்களை நீங்களும் காண.. Watch the below video..