
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டார்கள்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வின் பிரசன்னமாகியிருந்தனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை நடத்திசெல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை நேற்று முன்தினம் தினம் இராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
விளம்பரம்
இதன்படி, ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,
விளம்பரம்