
பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் 25ம் தேதிக்கு பதிலாக வரும் 27ம் தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வரும் 25ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
விளம்பரம்
இதனிடையே இதற்கான கவுண்ட்டவுன் வரும் 25-ம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விளம்பரம்