சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கு இந்த வருடம் தலைப்பொங்கல் எனவே அவர் பட்டுப் புடவையில் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்கிற சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் நடிகை மகாலட்சுமி. அவர் அதற்கு முன்பாக சன்மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு இவர் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். தற்போது கூட சன் டிவி, கலர்ஸ் தமிழ் என பல தொலைக்காட்சிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இணையத்தில் வைரலானது. பலரும் இவர்களது திருமணத்தைப் பற்றி பேட்டிகளும் செய்திகளும் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.




திரைத் துறையில் இருந்து யாரையும் அழைக்காமல் மிகவும் சீக்ரட்டாக திருப்பதியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்களை மட்டும் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மகாலட்சுமி. அதன்பின்னர் இவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு செல்வது, கோவில்களுக்கு செல்வது என்று இவர்கள் எது செய்தாலும் அது வைரல் ஆகி வருகிறது. மேலும் தனது மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகிறார் ரவீந்தர். அடிக்கடி மனைவியை கொஞ்சியும் அவருக்காக கவிதை எழுதியும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் மகாலட்சுமி தற்போது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பொங்கல் விழாவிற்காக பொங்கல் வைத்து அதைக் கொண்டாடி இருக்கிறார்.



ரவீந்தருக்கும் மகாலட்சுமிக்கும் திருமணமாகி இது முதல் பொங்கல் ஆகும். எனவே அவர்கள் இருவரும் தங்களது தல பொங்கலை சேர்ந்து கொண்டாடியிருக்கின்றனர். அதில் அவர் கையால் பெயிண்ட் செய்யப்பட்ட பட்டுப் புடவை ஒன்றை அணிந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.