காவ்யாவின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட சொன்ன பார்த்தி.! மனம் உடைந்து போன காவ்யா.!

ஈரமான ரோஜாவே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் காவ்யா கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டுமாறும் பார்த்தியின் அத்தை தேவி கூறுகிறார். இதனால் காவ்யா தாலியை கழட்ட தயார் ஆகி விட்டார். அதை பார்த்த பார்த்தி கண்கலங்கி நிற்கிறார். இந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் சற்று வித்தியாசமானது. இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் அண்ணன் பார்த்திக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் கடைசி நிமிடத்தில் கடத்தப்பட்டு விட்டதால் அந்த பெண்ணின் தங்கை காவியாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இந்த திருமணத்தில் காவியாவிற்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஏனென்றால் அவர் பார்த்தியின் தம்பி ஜீவாவை காதலித்து வருகிறார். தம்பியை காதலித்து விட்டு அண்ணனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று அவர் இந்த திருமணத்திற்கு மறுக்கிறார். இருப்பினும் கட்டாயமாக அவருக்கு இந்த திருமணத்தை செய்து வைத்து விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவ்யாவின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட சொன்ன பார்த்தி.! மனம் உடைந்து போன காவ்யா.! 1

விளம்பரம்

திருமணத்திற்கு பின்னர் பார்த்தியுடன் சுமுகமான வாழ்க்கையை காவியா வாழவே இல்லை. தொடர்ந்து விவாகரத்து கேட்டு பார்த்தியை அவர் மன சங்கடத்திற்கு ஆளாக்கி வந்தார். இருந்தபோதிலும் பார்த்தி எப்படியாவது காவியா மனதை மாற்றி அவருடன் இணைந்து வாழ்வேன் என்று சபதம் போட்டிருந்தார். இருப்பினும் அது கை கூடவே இல்லை. விவாகரத்திற்கு காவியா மனு செய்திருந்த நிலையில் கோர்ட்டில் இன்னும் ஒரு ஆறு மாதங்கள் பார்த்தியுடன் சேர்ந்து வாழ்ந்து பின்பு தான் உங்களுக்கு விவாகரத்து தர முடியும் என்று கூறி நீதிபதி அனுப்பி வைத்துவிட்டார். இதற்கிடையில் பார்த்தியின் அத்தை தேவி எப்படியாவது தனது மகளை பார்த்திக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த திருமணத்தில் பார்த்திக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்றாலும் காவ்யாவுக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்பதால் இந்த திருமணத்திற்கு வேண்டா வெறுப்பாக சம்மதம் சொல்கிறார் பார்த்தி.

தொடர்புடையவை  அம்மாவ தனியா விட்டுட்டு போகாத தம்பி..! வெளிநாடு செல்லும் மகனை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த ராதிகா.!

காவ்யாவின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட சொன்ன பார்த்தி.! மனம் உடைந்து போன காவ்யா.! 3

விளம்பரம்

இந்த நிலையில் பார்த்திக்கும் ரம்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அத்தை மகளான ரம்யாவை மாலை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார் பார்த்திபன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் காவ்யா மனம் உடைந்து போய் நிற்கிறார். காவ்யாவை பார்த்த பார்த்திபனும் கண் கலங்கி நிற்கிறார்.தற்போது வீட்டுக்கு வரும் காவ்யாவிடம் தாலியை கழட்டுமாறு பார்த்தியின் அத்தை தேவி கூறுகிறார். என்னை விரும்பாதவள் நான் கட்டிய தாலியையும் விரும்ப மாட்டார் என்று சொல்லி பார்த்தியும் சரி என்று கூறுகிறார். கலங்கிய கண்களுடன் காவ்யா தாலியை பிடித்தவாறு நின்று கொண்டிருக்கிறார். காவ்யா என முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment