நடிகர் சூர்யா தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான இவர் 1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது இந்திய அளவில் அறியப்படும் ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார்.

அதன் பின்னர் இவர் நந்தா, பிரெண்ட்ஸ், உயிரிலே கலந்தது, மௌனம் பேசியதே, பிதாமகன், பேரழகன், கஜினி, ஆறு, வேல், அயன், ஆதவன், சிங்கம், ஏழாம் அறிவு, மாற்றான், அஞ்சான், கடைக்குட்டி சிங்கம், காப்பான் போன்ற பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். அனைத்துமே சூர்யாவிற்கு வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம், சூரரைப் போற்று, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ராக்கெடரி நம்பி விளைவு என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் தற்போது கைவசம் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கிலும், சிறுத்தை சிவாவுடன் இணைந்து கங்குவா என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்திருக்கிறார். தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2D என்டர்டெயின்மெண்ட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூர்யா. இந்த நிறுவனத்தின் மூலமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களை அவர் தயாரித்திருக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம், 24, பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, உடன்பிறப்பே, ஜெய் பீம், விருமன் போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறார் சூர்யா. இவரது குடும்பத்தை பொறுத்தவரை இவரது தம்பி கார்த்தியும் ஒரு நடிகராக இருக்கிறார். இவரது மனைவி ஜோதிகா நாம் அனைவருக்கும் தெரிந்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்போது ஜோதிகாவும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். குறிப்பாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து அவர் காதல் தி கோர் என்கிற படத்திலும் ஸ்ரீ மற்றும் பிளாக் மேஜிக் என்கிற இரண்டு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தேவ் மற்றும் தியா என்கிற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். தனது மகன் மற்றும் மகளை பொதுவெளியில் அதிகம் காட்டாத சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

அதில் தனது மகன் மற்றும் மகளுடன் இருவரும் வெளிநாட்டிற்கு சென்று இருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் சென்றிருக்கும் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அங்கு நடுக்கடலில் வைத்து தனது மகன் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியும் அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

அந்த புகைப்படங்களை ஜோதிகாவே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
Youtube video embed code credits: Viral Videos 3.O