காற்றுக்கென்ன வேலி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வெண்ணிலாவை போதைப் பொருள் வழக்கில் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். அதை பார்க்கும் சூர்யா கதறி அழுது கொண்டிருக்கிறார். வெண்ணிலாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று தெரிகிறது. அந்த ப்ரோமோ தற்போது படியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் தற்போது வெளியாக இருக்கும் பொழுது வெண்ணிலா ஒரு இடத்தில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கையில் அட்டைப் பெட்டிகளுடன் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார். அப்போது அட்டைப்பெட்டிகள் கீழே விழுகிறது. அதன் உள்ளே புத்தகங்கள் இருக்கிறது. எனவே அவருக்கு உதவி செய்யும் வெண்ணிலா அட்டைப் பெட்டிகளை ஒரு லாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து போலீசார் அங்கு வருகின்றனர்.

பெட்டிகளை சோதனை இடும்பொழுது அதற்குள் கஞ்சா இருப்பது தெரிய வருகிறது. இதனால் ரவுடிகளிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அப்போது வெண்ணிலா தான் இதற்கெல்லாம் காரணம், இந்த பெண் போதை பொருள் எங்கே இருக்கிறது என்று சொல்வார். நாங்கள் வந்து அதை வேறு இடத்திற்கு மாற்றி செல்வோம் என்று கூறுகிறார். இதனால் வெண்ணிலாவை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். அதை பார்க்கும் சூர்யா கதறி அழுது கொண்டிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television