விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ராதிகா பாக்கியாவிடம் சென்று பழனிச்சாமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது பதிலுக்கு பாக்யா ராதிகாவைப் பார்த்து அதிரடியாக கேள்விகளை கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் கணவர் கோபி, பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இரண்டாவது திருமண வாழ்க்கை எதிர்பார்த்து அளவிற்கு கோபிக்கு அமையவில்லை. தினமும் சண்டை, சர்ச்சரவாக ஓடிக் கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது கதைப்படி ராதிகா மற்றும் கோபி இருவரும் பாக்யாவின் வீட்டிலேயே வந்து வசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிச்சாமியும் பாக்கியாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் கோபி இதுவரையும் இணைத்து வைத்து தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். பாக்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக கோபி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவும், ராதிகாவும் சமையலறையில் நின்று சமைத்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது ராதிகா பாக்யாவிடம் நீங்கள் ஏன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளக்கூடாது.? என்று ராதிகா கேட்கிறார்.

பழனிச்சாமியும் நீங்களும் நல்ல நண்பர்களாக இருக்கிறீர்களே.? நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது? என்று ராதிகா கேட்கிறார். அதற்கு பாக்யா, நீங்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டு ராதிகாவை ஆஃப் செய்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television