நொடிக்கு நொடி பரபரப்பு.! மரண பயத்தை கொடுக்கும் ‘டிமான்டி காலனி 2’ ட்ரைலர் இதோ.!

நடிகர் அருள்நிதி நடித்து வரும் ‘டிமாண்டி’ காலனி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்புடன் வெளியாகியுள்ள இந்த ட்ரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் வருவதாக இருக்கிறார் அருள்நிதி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்று வருகிறார். 2015ம் ஆண்டு ‘டிமான்டி காலனி’ என்கிற படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து மீண்டும் அருள்நிதியை வைத்து பாகம் இரண்டை எடுத்து இருக்கிறார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அருள் நிதியை கதாநாயகனாக வைத்து டிமாண்டி காலனி இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நொடிக்கு நொடி பரபரப்பு.! மரண பயத்தை கொடுக்கும் 'டிமான்டி காலனி 2' ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

இந்த படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, அருண்பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் “இருள் ஆளப்போகிறது” என்று மிக பயங்கரமான ஒரு டீசர் வீடியோவை வெளியிட்டிருந்தனர். மேலும் படத்தின் மோஷன் போஸ்டரில் சுடுகாட்டில் கல்லறைகளாக இருக்கிறது. அதனை இடையே அருள்நிதி கண்களில் ஒளியுடன் பேய் போல அமர்ந்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்ப்பும் கிடைத்தது.

தொடர்புடையவை  சிம்புவுக்காக யுவன் போட்ட மெட்டை காப்பியடித்து ஜவான் படத்தில் வைத்தாரா அனிருத்.?

நொடிக்கு நொடி பரபரப்பு.! மரண பயத்தை கொடுக்கும் 'டிமான்டி காலனி 2' ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment